Friday, May 22, 2009

உயிரோசை இதழ் 20 ல் வெளியான தமிழின் நேரடி ஜென் கவிதை -நரன்


ஜென் வரிக்குதிரை

--------------------------

1.

இரவையும் ,பகலையும் தன் உடலின் வழியே

ஒரே நேரத்தில் கடந்து செல்கிறது வரிக்குதிரை.

2.

பியானோ கட்டைகளின் மேல் ஒரு வரிக்குதிரை

வரிக்குதிரையின் மேல் ஒரு பியானோக்கட்டை

3.

நீண்ட புற்களிடை மேயும் வரிக்குதிரை

கருப்பு ,வெள்ளை மற்றும் பச்சை .

4 .

வரிக்குதிரையின் மேல் அரூப மனிதர்களிருவர்

செஸ் ஆடி கொண்டிருகிறார்கள் .

No comments: